கூடுதல் பஸ் இயக்கவேண்டும்

Update: 2022-09-29 14:36 GMT

குடவாசல் தாலுகாவில் எரவாஞ்சேரி பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம், தென்கரை, நல்லிசேரி, கடகம்பாடி,  நல்லிசேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக பூந்தோட்டம் பகுதிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் காலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கூட்டமாக வரும் பஸ்களில் படிகளில்  தொங்கி கொண்டு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்