நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2022-09-15 14:53 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலத்தில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் இருந்ததால் அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது இங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அதே நிலை தான் தொடர்கிறது. இதனால் பயணிகள் ஓடி சென்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். இதனால் பயணிகள் பஸ்சில் ஏறும் போது நிலை தடுமாற வாய்ப்பு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்