பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-07 14:00 GMT
தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே பிரசித்தி பெற்ற பூண்டி மாதா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதன்காரணமாக தஞ்சையில் இருந்து செங்கிப்பெட்டி அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி சென்று பூண்டிமாதா கோவிலுக்கு செல்கின்றனர். இதனால் அந்த பகுதிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு முறையான பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

.

மேலும் செய்திகள்

பஸ் வசதி