மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான் தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம் வழியாக நிலக்கோட்டை வரை இயக்கப்படும் ஒரு சில பஸ்கள் பயணிக்க முடியாத வகையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.