பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-08-03 14:14 GMT

கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையத்தில் இருந்து ஈரோடு மற்றும் கரூருக்கு ஏராளமானோர் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு பஸ்சில் சென்று வருகிறார்கள். இந்த கிராமத்தில் டவுன் பஸ் தவிர தனியார் பஸ்கள் மற்றும் தொலைதூர அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் அனைத்து பஸ்களும் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்