போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2022-08-02 13:25 GMT
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டாக அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கால்நடைகள் அவ்வபோது முட்டிவிடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சதுடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்