ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-02 12:21 GMT
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக கல்லணையில் பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருவெறும்பூர்-சர்க்கார்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் வந்து செல்லும் பஸ்நிலையத்தில் பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக நிழற்குடையின் மேற்பகுதி முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழலில் இருக்கிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் கல்லணையில் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்