ராமநாதபுரம் மாவட்டம் தெற்க்குதரவை ஊராட்சி ஊரணிகரை வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதன் காரணமாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.