பஸ்கள் வராததால் பயணிகள் அவதி

Update: 2023-09-17 16:04 GMT

தேவதானப்பட்டி ஊருக்குள் இரவு 8 மணிக்கு மேல் வெளியூர் பஸ்கள் வருவதில்லை. இதனால் தேவதானப்பட்டியில் இருந்து வெளியூர் செல்வதற்காக வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்களில் வெளியூருக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இரவில் வெளியூர் செல்லும் அரசு பஸ்கள் தேவதானப்பட்டி வழியாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்