விபத்து அபாயம்

Update: 2023-09-13 16:38 GMT

திருச்சி கிராப்பட்டியில் உள்ள மேம்பால இறக்கப்பகுதியில் சாலையோரத்தில் சிலர் சரக்கு வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தின் அருகே போலீசார் சார்பில் இது விபத்து பகுதி என எச்சரிக்கை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்து நடக்கும் முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்