போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-09-10 12:28 GMT

திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விடுகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்