அதிகரிக்கும் சாலை விபத்துகள்

Update: 2023-09-10 12:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-திருமலைவாசல் நெடுஞ்சாலையில் விநாயககுடி பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் மூங்கில் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மூங்கில் மரங்களை வெட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்