விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-09-03 16:32 GMT

தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் ஆங்காங்கே நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. சாலைகளில் பொதுமக்கள் கை காட்டும் போது தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை உடனடியாக வாகனங்களை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இதனை ஒழுங்குபடுத்தி சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்