எச்சரிக்கை பலகை அவசியம்

Update: 2023-08-30 09:27 GMT
காணை கிராமத்தில் விழுப்புரம்-திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் இருவழிச்சாலை முடியும் இடத்தில் நடுவில் தடுப்புக்கட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டு்ம் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்