சிக்னல் அமைக்க வேண்டும்

Update: 2023-08-27 14:58 GMT

ஈரோடு மூலப்பாளையம் பெட்ரோல் பங்க் பகுதியில் கரூர், பழனி, ஈரோடு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு புதிதாக சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சாஸ்திரி நகர் வழியாக கரூர் சாலை செல்பவர்களுக்கு சிக்னல் இல்லை. இந்த வழியாக காலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் பள்ளிக்கூடத்துக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க கரூர் சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்