ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-27 11:41 GMT

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 13- வது வார்டு வடக்கு ஆண்டார் வீதியில் சாலையில் உள்ள வெள்ளைக் கோட்டையும் தாண்டி ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமித்துள்ளதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் சாலையோரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்