போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-23 13:22 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவசர சிகிச்சைக்காக அந்த வழியாக செல்லும் ஆம்புலன்சு வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்