கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-08-23 13:19 GMT

மதுரை கிழக்கு தாலுகாவிற்குட்பட்ட புதுத்தாமரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற  கிராம பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பள்ளி மாணவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் வணிக ரீதியாக பயணிக்கின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதியின்றி இயங்கும் பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 




மேலும் செய்திகள்