விதிமீறும் வாகன ஓட்டிகளால் ஆபத்து

Update: 2023-08-16 16:55 GMT

விதிமீறும் வாகன ஓட்டிகளால் ஆபத்து

திருப்பூர் டவுன்ஹால் விநாயகர் கோவிலின் பின் பகுதியில் மிகவும் குறுகலான வளைவு உள்ளது. இது ஒரு வழிப்பாதையாக உள்ளது. ஊத்துக்குளி ரோடு, ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் இந்த வழியாக செல்லும் நிலையில் சில வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் எதிர் திசையில் இருந்து இந்த ரோட்டிற்கு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்கும் விதமாக ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அவ்வப்போது சிலர் ஒரு வழிப்பாதையில் வருகின்றனர். எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக செல்லக்கூடிய இப்பகுதியில் வாகன ஓட்டிகள் விதிமீறுவது மிகவும் ஆபத்தான செயலாக உள்ளது. எனவே ஏதேனும் விபரீதம் நிகழும் முன் இதை தடுப்பதற்கு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார் காவிலிபாளையம்.

8786484633

மேலும் செய்திகள்