பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-09 11:17 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் ஊராட்சியில் உள்ள பயணிகள் நிழலகம் முறையான பராமரிப்பின்றிஉள்ளது. குறிப்பாக பயணிகள் நிழலகத்தில் உள்ள இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், நிழலக கட்டிடத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக பயணிகள் அச்சத்துடன் பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்