போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-08-06 13:40 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் கால்நடைகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்