டிக்கெட் முன்பதிவு மையம் வேண்டும்

Update: 2023-08-06 13:38 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்காக பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் குத்தாலம் பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்ய மயிலாடுதுறை, கும்பகோணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பயணிகள் நலன்கருதி குத்தாலம் பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்