போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-06 13:06 GMT

கோத்தகிரி நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையான மிளிதேன் செல்லும் சாலையில் பஸ் நிறுத்த பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடையை மீறி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இது பயணிகள் நிற்பதற்கும், வாகனங்கள் சென்று வருவதற்கும் இடையூறாக உள்ளது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்