மரக்கிளையை அகற்ற வேண்டும்

Update: 2023-08-06 07:46 GMT

மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி சீரோ பாயிண்ட் பகுதியை நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையோரத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் கிளைகள் சர்வீஸ் சாலையையும் தாண்டி நான்கு வழி சாலை நோக்கி வளர்ந்து வருகிறது. இதனால், கனரக வாகன ஓட்டிகள் பெரும் சிகமத்துக்குள்ளாகவதுடன், காற்றில் வேகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி மரக்கிளையை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்