பராமரிப்பில்லாத பயணிகள் நிழலகம்

Update: 2023-07-30 13:12 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கிறது. குறிப்பாக நிழலக கட்டித்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்