கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய காலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய பெரிய பள்ளம் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தொடர்ந்து நிலை தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.