பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

Update: 2023-07-23 15:53 GMT
பிரம்மதேசம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் திண்டிவனம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம்-பிரம்மதேசத்திற்கு செல்ல பள்ளி நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்