முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-07-12 10:45 GMT

கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு வளர்ந்து காணப்படுகின்றன. அங்கு வனவிலங்குகள் மறைந்து நின்றால் கூட தெரியாது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பாதசாரிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் புதர் கிளைகள் காயத்தை ஏற்படுத்துகின்றன. எனவே முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்