போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-07-02 10:38 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் சிலர், தங்களது வாகனங்களை அங்குள்ள நடைபாதைக்கு அருகில் உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகள் சாலையின் நடுவில் நடக்க வேண்டியுள்ளதால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்