தனியார் பஸ் கட்டணம்; அதிகாரிகள் ஆய்வு வேண்டும்

Update: 2022-07-23 15:14 GMT
திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்துக்கு பின் தனியார் பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பஸ் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் அதிகப்படியான பஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாரூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயம் செய்த பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்