அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2023-06-25 09:23 GMT

கோவை வெள்ளமடை பகுதியில் இருந்து உக்கடம் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை 8.30 மணி மற்றும் மாலை 4 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் அந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த பஸ் சேவை தொடங்கப்படவில்ைல. இதனால் மாணவர்கள் தனியார் பஸ்களில் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு பஸ்சில் பயணிக்கும் 'பஸ் பாஸ்' வைத்திருந்தும் பயன் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே அந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதோடு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்