கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-06-18 09:42 GMT

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு காலை நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக பல்வேறு அலுவலக பணிகளுக்காக ஊட்டிக்கு ஏராளமானவர்கள் செல்கின்றனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்