மதுரை விரகனூர் ரிங்ரோடு ரவுண்டானாவில் 6 பிரிவுகளாக சாலை பிரிந்து செல்கிறது. ஆனால் ராமநாதபுரம் செல்லும் சாலையில் மட்டுமே அறிவிப்பு பலகை இருப்பதால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஊர் திசை காட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் வாகனஓட்டிகள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் வழிமாறி செல்லும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இந்த ரவுண்டானாவின் அனைத்து சாலை பிரிவுகளிலும் ஊர் பெயர் காட்டும் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.