உரிய நேரத்துக்கு பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-06-04 10:49 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மதியவேளையில் உரிய நேரத்துக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதியம் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மாலையில் வரும் பஸ்சில் தான் ஏறி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிக்கு மதிய வேளையில் உரிய நேரத்துக்கு பஸ்கள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி