பயணிகள் நிழற்குடை அவசியம்

Update: 2023-05-31 14:57 GMT
அரசூர் கூட்டுரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள், வயதானவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்