பயணிகள் அவதி

Update: 2023-05-28 09:22 GMT

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பீளமேடு, சித்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை மற்றும் மதிய வேளையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மேலும் மதியம் மற்றும் மாலை வேளைகளில் சித்ரா, பீளமேடு ஆகிய பகுதிகளில் இருந்து கோவை ரெயில் நிலையத்துக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அந்த வழித்தடங்களில் சென்று வரும் பயணிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் போதிய அளவில் பஸ் சேவையை நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி