தூய்மையற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2023-05-24 12:06 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இவர்களின் நலன் கருதி பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பகுதியில் இருந்து பஸ்களுக்கு சென்று வருபவர்கள் மழைக்காலங்களிலும்,வெயில் காலங்களிலும் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து பஸ்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் நிழற்குடையில் குப்பைகள் அதிக அளவில் கிடக்கிறது. பயணிகள் நிழற்குடை மாசுபட்டு இருக்கிறது. இதனால் யாரும் அந்த பயணிகள் நிழற்குடைக்குள் சென்று அமர முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி