நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-05-21 13:19 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது வி. கைகாட்டி மேற்கு பகுதியாகும். இங்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வடபுறத்தில் அரியலூர் செல்வதற்கு பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இங்கு பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை அமைக்காமல் உள்ளது. அரியலூர், பெரம்பலூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் மிகவும் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி