மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி செல்லும் ரோட்டில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியே இரவுநேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்து எதுவும் நிகழ்வதற்குள் இந்த பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.