மேற்கூரையுடன் கூடிய பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-05-21 11:55 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதி வழியாக புத்தனாம்பட்டி, துறையூர், சேலம் செல்லும் பஸ்கள் தினசரி 500-க்கும் மேற்பட்டவை கடந்து செல்கின்றன. மழை, வெயில், விசேஷ காலங்களில் அவதியுறும் பயணிகள் நலன் கருதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பஸ் நிறுத்தத்தில் உள்ளதுபோல் நம்பர் 1 டோல்கேட் பகுதியிலும் மேற்கூரையிட்ட பஸ் நிறுத்தம் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி