மழை வெள்ளத்தால் மாயமான தரைப்பாலம்

Update: 2023-05-14 11:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் மாமாகுடி-மேலபெரும்பள்ளம் செல்லும் சாலையில் தரைப்பாலம் இருந்தது. வாய்க்காலில் வந்த அதிகப்படியான மழை வெள்ளத்தால் தரைப்பாலம் சேதமடைந்தது இருந்த தடமே தெரியாதபடி மாயமாகி உள்ளது . இதன்காரணமாக தற்போது சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலம் அமைத்து துண்டிக்கப்பட்ட சாலையை இணைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி