போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-05-07 07:20 GMT

திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் தேரேகால் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் செடி, கொடிகள், கழிவுகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், அந்த வழியாக வாகனங்கள் போக்குவரத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கி காணப்படுகிறது. எனவே, கழிவுகளை அகற்றுவதுடன், மறுஅளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை விரிவாக்கம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி