மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-04-30 12:13 GMT
அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பழைய நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறிப்பாக மாவட்ட நூலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள செட்டேரிமேடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. சில மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி