போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-04-30 10:26 GMT


மயிலாடுதுறை பகுதி மகாதான தெருவில் கால்நடைகள் அதிகளவில் சுற்றத்திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கால்நடைகள் இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளைபிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

மேலும் செய்திகள்

பஸ் வசதி