கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-04-26 11:43 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது முனியங்குறிச்சி, சேலத்தார்காடு, மு.புத்தூர் கிராமங்கள். இந்த கிராமங்களின் முதன்மை சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக அதிகளவில் கருவேல முட்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை நிற பட்டைகளை மறைத்தும், சாலையில் பாதியளவு வளர்ந்துள்ளது. மு.புத்தூர் கிராமத்திலிருந்து அரியலூருக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் தாறுமாறாக செல்வதால் இவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் லாரிகளுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது கருவேல முட்கள் பொதுமக்களின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி