மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ்நிறுத்தத்தில் குறிப்பிட்ட சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் 5-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பஸ்கள் நின்று செல்லவும், தடையற்ற குடிநீர் வினியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?