பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-04-12 16:01 GMT

பெருந்துறை-சென்னிமலை சாலையில் உள்ள எல்லமேடு முக்கிய சந்திப்பாக உள்ளது. மேலும் சிப்காட், வெள்ளோடு மற்றும் ஈங்கூரின் மத்திய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு ஒரு சில பஸ்கள் நின்று செல்வதில்ைல. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எல்லமேடுவில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்