மயிலாடுதுறை மகாதான தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றிதிரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.