நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-04-05 07:09 GMT

நாகர்கோவில் ராமன்புதூர் சற்குணவீதியில் செயின்ட் மேரி தெரு உள்ளது. இந்த தெருவில் நடைபாதையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை முறையாக பாராமரிக்காமலும், அதன் சிலாப்புகள் ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும் நடைபாதையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் ஓடையை தூர்வாரி சிலாப்புகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆன்டணி, ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி