பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-04-05 06:42 GMT

ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பெருந்துறை சிப்காட் வழியாக செல்கின்றன. ஆனால் இந்த பஸ்கள் அங்கு நிறுத்தப்படாததால் சிப்காட்டுக்கு மற்றும் இதர பணிக்கு ஈரோட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். டவுன் பஸ்களும், மினி பஸ்களும் மட்டுமே சிப்காட் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. எனவே கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பெருந்துறை சிப்காட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்